திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில்  ரயில்வே அலுவலர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற ரயில்வே அலுவலரின் மனைவியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற ரயில்வே அலுவலரின் மனைவியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    விருதுநகர் எம்.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்(55). இவர் ரயில் நிலையத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரயிலில் இறங்கி கிழக்கு பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சரக்கு ரயில்பெட்டிகள் நிறுத்தமிடத்தை கடக்கும் போது திடீரென மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினாராம்.

   இது தொடர்பாக விருதுநகர் ரயில் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.